Showing posts with label emergency martyrs. Show all posts
Showing posts with label emergency martyrs. Show all posts

Friday, October 26, 2018

EMERGENCY MARTYRS DAY EVERY YEAR AFFIRMS ANTI-CONGRESSISM IN OUR MINDS


திராவிட நாடு கேட்டுப்  போராடிய எங்களை ஒடுக்கப் பிரிவினை தடைச் சட்டம் கொண்டு வந்த நேருவின் காங்கிரசை ,  இரண்டே நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றி பெற வைத்த தி.மு.கழகத்தை உடைக்க துரோகி ஈ .வெ ,கி .சம்பத்தை களமிறக்கி வெட்டிக்  கொள்ளும் உரிமையுடன் ஒட்டிக் கொள்ளும் உரிமை என்று தமிழ் தேசிய கட்சி தொடங்க செய்த நேருவின் காங்கிரசை , மலையக தமிழர்களை  நாடற்றவர்களாக்கிய லால் பகதூர் சாஸ்திரியின் காங்கிரசை , பெரும்பான்மை இழந்த இந்திரா காந்தியின் ஆட்சியை காப்பாற்றிய திராவிட முன்னேற்றக்  கழக ஆட்சியை கலைத்து கழக தலைவர்களை சிறையில் அடைத்து அடித்து உதைத்து  கழக கொள்கை பரப்புச் செயலாளர் சி.சிட்டிபாபுவையும் சாத்தூர் பாலகிருஷ்ணன் அவர்களையும் கொன்ற காங்கிரசை,  மிரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் மீது வருமான வரி சோதனை நடத்தி மிரட்டி தனிக்  கட்சி துவங்கச் செய்த காங்கிரசை ,  ஈழத் தமிழரை காப்பாற்ற அனுப்பப்பட்ட இந்திய அமைதி படையாலேயே அவர்களை கொன்று குவித்த ராஜிவ் காந்தியின் காங்கிரசை, உலகில் நாஜிக்களின் இனப்  படுகொலையை விட மிகப் பேரளவிலான இழைத்த தமிழர் இனப்  படுகொலை நடைபெற மௌன சாமியாராக மறைமுகமாக சிங்களவருக்கு உதவிய மௌன்  மோகன் சிங்கின் காங்கிரசை உயிருள்ளவரையும் செத்துவிட்டால்  சொர்க்கத்திலோ நரகத்திலோ எங்கு போனாலும் நான்  உறுதிபட எதிர்க்கப் போகும் காங்கிரசை  நினைவூட்டவே நெருக்கடி நாள் நினைவேந்தல் நிகழ்ச்சியை திராவிடப் பேரவை நடத்தியது. 1974 ல் புதுவை பிருந்தாவனம் பேராசியர் ராஜபாண்டியன் இல்லத்தில்  நான்  அளித்த விருந்தில் கலைஞருடன் சிட்டிபாபு..



Wednesday, September 12, 2018

AFTER MY DEATH FROM HEAVEN I WILL FIGHT FOR JUSTICE TO EELAM TAMILS IN GHOST WORLD


உயிரோடு உலகின் பல நாடுகளில் வாழும் ஈழத்  தமிழர்கள் 1977 முதல் ஈழத்  தமிழரும் கோழைத்  தமிழரும் என்ற கட்டுரையை கலைஞர் அவர்களை ஆசிரியராகக் கொண்ட கழகத்தின் அதிகாரப்பூர்வ  கிழமை ஏடு  நம்நாடு  தொடங்கி இன்றளவும் விடாமல் உழைக்கும் எனக்கு 2006 ல் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அளித்த பாமாலையே போதும்  முடிவு கட்டி விட்டார்கள்.


1978 முதல் 1994 வரை தொழில் வயின்  பிரிவு காரணமாக நான் புதுவையில் திங்களுக்கு ஒரு முறை வந்து சென்றவன் என்பதால் பிரபாகரனோடு நேரில் பழக்கம் இல்லாதவன்.  எனவே உலகின் எந்த நாட்டில் நடந்த எந்த மாநாட்டுக்கும்  அழைக்கவில்லை. பேராசிரியர் தீரன் போன்றவர்கள் , சினிமா நடிக  நடிகையர் , ஆங்கிலத்தில் எந்தச்  சபையிலும் ஒரு  எழுதி வைத்துக் கூட படிக்கச் முடியாதவர்கள் , இவர்களை அழைத்தார்கள். வந்த அழைப்புக்கே விசா வராமல் தடுத்தவர்கள் , தொலை  பேசியில் ஆகா  ஓகோ  புகழ்வதும்  என்னை உலக நாட்டுக்கு விளம்பரம் இல்லாமல்  சென்று ஈழத்து தமிழர்கள் வாழும் சேரிகளில் தங்கி அந்தந்த நாட்டு  ஆட்சியாளர்களை , நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து தமிழர் நிலை பற்றிச்  சொல்லிட வாதிட முட்டுக்  கட்டை போட்டவர்கள் , இந்தியாவின் பிற மாநிலங்களில்  நகரில் கண்  திறப்புக் கருத்தரங்கு நடத்த ஒருவர் மட்டுமே 100 யூரோ அனுப்பி , வேறு எவரும் நிதி தர  முடியாமல் , கருத்தரங்கு நடக்காமல் தடுத்தவர்கள் சிங்களவர் அல்ல. தமிழ்நாட்டுத் தமிழரே..





















என் யோசனைப்படி உருவான புலம் பெயர்ந்த தமிழீழ அரசில் கவுரவ நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் ஊர் உலகு  அறியாதோரை இந்தியாவில் நியமித்தவர்கள்   அறியவே  பழைய பதிவுகள் இங்கு பதிவாகின்றன.

என் பணி  இறந்த பிறகு சொர்க்க லோகத்தில் உள்ள ஈழத்  தமிழர்களின் நடுவில் ஆவியுலகில் நீதி   கேட்டுப் போராடவே ........

 என்  எதிர்கால  லட்சியம் இதுவே. 

AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...